.ஹபுகஸ்தலாவை அரபுக் கல்­லூ­ரி விவகாரம் : 3 மாணவர்கள் கைது..


ஹபு­கஸ்­த­லாவ –ஹாமி­தியா அரபுக் கல்­லூ­ரியின் மின்­சார மீற்றர், நீர்த்­தாங்கி மற்றும் காபட் எரி­யூட்­டிய சம்­ப­வத்தில் சந்­தே­கத்தின் பேரில் மூன்று கல்­லூரி மாண­வர்­களை நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் நேற்று எல்­பொட சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தினர்.

பொலிஸார் நடத்­திய விசா­ர­ணை­களும் வாக்கு மூல அறிக்­கை­களும் நேற்று நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டா­ததால் நீதிவான் மூன்று சந்­தேக நபர்­க­ளான மாண­வர்­க­ளையும் கம்­பளை சிறுவர் நன்­ந­டத்தை சீர்­தி­ருத்த நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கும்­ப­டியும் எதிர்­வரும் 25 ஆம் திகதி நாவ­லப்­பிட்­டிய நீதிவான் நீதி­மன்றில் அவர்­களை ஆஜர்­ப­டுத்­தும்­ப­டியும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார்.

உத்­த­ர­வுக்­கி­ணங்க 12 வய­துக்கும் 13 வய­துக்கும் உட்­பட்ட மூன்று மாணவர்களும் கம்பளை சிறுவர் நன்நடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்...
.
 

Comments