நிர்வாண உடல்களுக்கு யுவதிகள் 15 பேரின் முகங்களை சேர்த்து இணையத்தில் வெளியிட்டவர் சிக்கினார்.

யுவதிகள் 15 பேரின் புகைப்படங்களில் உள்ள முகங்களுடன் நிர்வாண உடல் பகுதி படங்களை இணைத்து இணையத்தளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தினர்.

சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

Comments