25 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் சந்தேக நபரொருவர் கைது ..

திருமண வைபவமொன்றிற்காக கொண்டு வரப்பட்ட 25 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் சந்தேக நபரொருவர் அம்பாந்தோட்டை வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரியவெவ – விஹாரகல பிரதேசத்தில் வீடொன்றில் திடீர் சோதனையிட்ட அதிகாரிகள் வீட்டின் குளிர்சாதனபெட்டியில் வைக்கப்பட்டிருந்த குறித்த மான் இறைச்சி தொகையினை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Comments