வேன் பள்ளத்தில் விழுந்ததில் 9 பேர் காயம்!

எல்ல – இராவண எல்ல வீதியின் 24ம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது, வேனினுள் 11 பேர் பயணித்துள்ளதோடு, அதில் அறுவர் சிறுவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments