இலங்கைக்கு செப்டம்பர் மாதம் முக்கிய சான்றிதழ்!!

இலங்கைக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மலேரியா நோயை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமை   சான்றிதழ் மூலம் பெற்று கொள்ளவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வைக்கும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் மலேரியா நோய் குறித்து பதிவாகவில்லை என அவர்   மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments