ஜனக வாகும்பர இராஜினாமா!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களவான தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனக வாகும்பர தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கடந்த 19ம் திகதியும், ஹோமாகம ஆசன அமைப்பாளராக பதவியில் இருந்த விலகுவதாக பந்துல குணவர்த்த கடந்த 21ம் திகதியும் அறிவித்தனர்.

இதனையடுத்து, டலஸ் அழகப்பெருமவின் இடத்திற்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும், பந்துலவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி திலகசிறியும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments