முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசுகள் பூர்த்தி : நீதியமைச்சரிடம் கையளிக்கப்படும்
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கு கடந்த கால அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு தனது சிபாரிசுகளை விரைவில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவிடம் கையளிக்கவுள்ளது.
பலதார மணம், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை, விவாகரத்தின் போது பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்தாஹ் (நஷ்டஈடு) தாபரிப்புப் பணம் போன்ற விடயங்கள் உட்பட பல திருத்தங்களை குறிப்பிட்ட குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 12 லிருந்து 18 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
பலதார மணத்திலும் சில கட்டுப்பாடுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விவாகரத்தின்போது கணவர் மனைவிக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தாபரிப்பு தொடர்பாக நிதியமொன்றினை நிறுவுவதற்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியம் நீதியமைச்சின் கீழ் அமைய வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு குழுவும் நியமிக்கப்படும்.
அக் குழுவின் உறுப்பினர்களாக நீதியமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட ஐவர் உள்ளடங்கியிருப்பர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுகளைச் செய்வதற்கு கடந்த கால அரசாங்கத்தினால் தற்போது ஓய்வுபெற்றிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என்போர் அங்கம் பெற்றுள்ளனர். இக்குழு பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணி காதி நீதிபதிகளாக பெண்களும் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்றாலும் உலமா சபை இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
குழுவின் சிபாரிசுகள் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதும் நீதியமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றதன் பின்பே சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கு கடந்த கால அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு தனது சிபாரிசுகளை விரைவில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவிடம் கையளிக்கவுள்ளது.
பலதார மணம், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை, விவாகரத்தின் போது பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்தாஹ் (நஷ்டஈடு) தாபரிப்புப் பணம் போன்ற விடயங்கள் உட்பட பல திருத்தங்களை குறிப்பிட்ட குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 12 லிருந்து 18 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
பலதார மணத்திலும் சில கட்டுப்பாடுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விவாகரத்தின்போது கணவர் மனைவிக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தாபரிப்பு தொடர்பாக நிதியமொன்றினை நிறுவுவதற்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியம் நீதியமைச்சின் கீழ் அமைய வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு குழுவும் நியமிக்கப்படும்.
அக் குழுவின் உறுப்பினர்களாக நீதியமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட ஐவர் உள்ளடங்கியிருப்பர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுகளைச் செய்வதற்கு கடந்த கால அரசாங்கத்தினால் தற்போது ஓய்வுபெற்றிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என்போர் அங்கம் பெற்றுள்ளனர். இக்குழு பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணி காதி நீதிபதிகளாக பெண்களும் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்றாலும் உலமா சபை இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
குழுவின் சிபாரிசுகள் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதும் நீதியமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றதன் பின்பே சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.


Comments
Post a Comment