விரைவில் அவரும் கைது?

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது நடந்த ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல்களில் மிக் விமான கொள்வனவு தொடர்பான ஊழல் நாட்டிற்குள் பரவலாக பேசப்பட்டு வந்த சம்பவமாக இருந்தது.

இந்நிலையில்,  மிக் தாக்குதல் விமான கொள்வனவு சம்பந்தமான நிதி ஆவணங்கள் காணாமல் போனமை, அந்த கொடுக்கல் வாங்கல்களி்ன் போது 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் விமானப்படையின் முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக்க கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஊழல் தொடர்பாக ரொஷான் குணதிலக்க மாத்திரமல்லாது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Comments