அடுத்த முறை வெறுங்கையுடன் செல்லபோவதில்லை – மஹிந்த சீற்றம்
கூட்டு எதிர்க்கட்சியின் தற்போது மேற்கொண்ட பாதயாத்திரை ஒரு ஒத்திகை மாத்திரமே எனவும் அடுத்த முறையில் வீதியில் இறங்குவது செல்வதற்கு அல்ல எடுத்துச் செல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதயாத்திரை முடிவில் கொழும்பில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த முறை எடுத்துச் செல்லவே வீதிக்கு வருவோம். இது ஒத்திகை மாத்திரமே, 20 ஆண்டுகள் ஆளும் கட்சியில் இருந்தவர்களுக்கு எதிர்க்கட்சியில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காட்ட வேண்டும்.
நாங்கள் தயார். நீங்கள் தயார் என்றால், நீங்கள் எதனை கேட்கின்றீர்களோ அதனை நாங்கள் பெற்றுத்தருவோம் என்றார்.


Comments
Post a Comment