இளைஞர்களுக்கு பிரதமர் கோரிக்கை!

நவீன அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்குஇளைஞர்கள் ஒன்றிணையுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

தெனியாய, பிட்டபெத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

அனைவரும் ஒன்றிணைந்து செய்ல்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை அழிப்பதோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியை வளர்ப்பதோ எமது நோக்கம் இல்லை.

அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியினை அமைப்பது கடினமான செயலாகும்.

எனினும், அனைத்து கட்சிகளும் இணைந்து நாட்டை வலுப்படுத்துவது அவசியமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Comments