பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மாதம் 07ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

Comments