திருமலை அலஸ் தோட்டத்தில் விபத்து லொறியுடன் சாரதி தப்பியோட்டம்

இன்று வியாழன் பிற்பகல் புல்மோட்டை வீதி அலஸ் தோட்டம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்றுடன் லாரியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

லாரி வண்டியை நிறுத்தாது தப்பியோடியுள்ளதாள் அயலிலுள்ள ஊர் மக்கள் காயமடைந்த சாரதியை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற பின்னர் போலீசாருக்கு தெரியப்படுத்தியதும் .உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர்.

Comments