மெமரி கார்ட் பாவனையாளர்களே! எச்சரிக்கை!!

மெமரி கார்ட், பென்டிரைவ் போன்ற இரண்டாம் தர சேமிப் பகங்களில் நாம் சேமித்து வைக்கும் எந்த சேமிப்பையும் முழுமையாக அழிக்க முடியாது.

இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இப்படி சேமிக்கும் தகவல் எதுவுமே எப்போதும் அழிவதேயில்லை. அழிக்கவும் முடியாது.

அதை எப்போது வேண்டுமானாலும் ‘ரெக்கவர்‘ செய்து பெறலாம். அது சமீபத்தில் சேமித்த தகவல் மட்டுமல்ல, பல மாதங்களுக்கு முன் சேமித்த தகவல்களையும் திரும்பப்பெறமுடியும்.இதனால்தான் சிலரின் அந்தரங்கம் வெளியே இணையத்தில் வந்துவிடுகிறது.

மெமரி கார்டு அல்லது பென்டிரைவ்களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணினியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும் மென்பொருள் துணை கொண்டு அந்தக்கணினியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும்.

இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணினியின் திரையில் தெரியாது.கணினி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம்ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்பார்கள். என்னதான் நாம் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக ரெக்கவர் செய்து கொடுக்க பல மென்பொருள்கள் வந்துவிட்டன.

நாம் திரையை பார்த்துக்கொண்டு தான் இருப்போம் ஆனாலும் நம் மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல்நேற்றுவரை உள்ளஅனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும்.

உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம். வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க

வேண்டுமானால் கணினியின் ‘ஸ்டார்ட்‘ பட்டனை ‘ரைட் கிளிக்‘ செய்து ‘எக்ஸ்ப்ளோர்‘ என்பதை சொடுக்கி வரும் திரையில் இடது பக்கத்தில் ‘மெமரி கார்டு‘க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்.

எல்லாம் காப்பி செய்து முடித்த பின் மெமரி கார்டை ‘பார்மட்‘ செய்து பயன்படுத்தலாம்.மெமரி கார்டை யாரிடமும் கொடுக்காமல் இருப்பதே நமது தகவல்களுக்கு பாதுகாப்பு.

Comments