யாழ்.மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் புதன்கிழமை பூட்டு!

யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் பாடசாலை 3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் இதற்கமைய 3 ஆம் தவணைக்கான பாடசாலைகள் 1 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.

Comments