விலகுவதாகக் கூறுபவர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறி வருகின்ற பலர், கட்சியில் தொடர்ந்து இருந்தாலும் விலக்கப்பட வேண்டியவர்களே என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்கு இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

உண்மையில் சுதந்திர கட்சியோடு இணைந்து பயணிக்க பலர் தயாராக இருக்கின்றனர். சிலரே கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறி வருகின்றனர்.

அவ்வாறானவர்கள் மிகவும் பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாவர். அவர்கள் கட்சியில் தொடர்ந்து இணைந்திருந்தாலும், எதிர்வரும் தேர்தல்களில் அவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்பட மாட்டாது என்று அவர் மேலு குறிப்பிட்டுள்ளார்.

Comments