கம்பளை பிரதேசத்தில் தீயில் முடிந்த உறவு.
காதல் தொடர்பொன்றினால் ஏற்பட்ட பிரச்சினை லொறியொன்றை எரிக்கும் தூரம் வரை சென்றுள்ளது.
கம்பளை கம்வதுர , மாவதுர பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கள்ளக்காதல் விவகாரமே இவ்வளவு தூரம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் உரிமையாளர், சந்தேகநபரின் மனைவியுடன் தொடர்பொன்றைப் பேணிவந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் இரவு நேரத்தில் லொறிக்கு தீயிட்டுள்ளார்.


Comments
Post a Comment