மாளிகாவத்தையில் பெண்கள் தொழும் மண்டபம் திறந்து வைப்பு

மாளிகாவத்தை தேசிய வை.எம்.எம். ஏ யில், காலம் சென்ற சிரேஸ்ட ஊடகவியலாளா் எஸ்.பி ஹலால்டீன் நுாலகம், ரெஹானா உம்மா அலி அவா்களின் பெயரிலான பெண்கள் தொழுகை மண்டபம் ஆகியன ஏ.எச்.எம். பௌசியால் நேற்று (21)திறந்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி, வா்த்தகா் முஸ்லீம் சலாஹூடின், மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ தலைவா் எம்.எம். மொஹமட், ஆலோசகா் எஸ்.பி தாசீம் ஆகியோா் இந் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

Comments