யாழில் ஊமைப் பெண்ணைக் கற்பழித்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வைத்த ஆப்பு..!
ஊமைப் பெண்ணைக் கற்பழித்த காவாலிகளுக்கு 15 ஆண்டு கடூழிய சிறை!! யாழ் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு கடந்த 2009ம் ஆண்டு ஆடி மாதம் கைதடிப் பகுதியில் ஊமைப் பெண் ஒருவரை கடத்திச் சென்று கற்பழித்த 4 பேருக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளை தலா 25 ஆயிரம் அபராதமாகவும் தலா 5 லட்சம் ரூபா நட்டஈடாகவும் கொடுக்குமாறும் அவற்றைக் கட்டத்தவறினால் மேலதிகமாக இரண்டரை வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை வழங்குமாறும் நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.


Comments
Post a Comment