அரசாங்கம் மாறினாலும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடரும்!
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மாறினாலும், கடந்த அரசாங்கத்திலுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நிட்டம்புவயில் அத்தனகல்லை பிரதேச சபைக்கான கட்டடமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் சந்திரிக்கா குமாரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலையும் அரசாங்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதனைத் தெரியாதவர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
புதிய அரசாங்கம் கையேற்றதன் பின்னர் முன்னைய அரசாங்கம் ஆரம்பித்து முடிக்காத பணிகளை நிறைவு செய்வது அந்த அரசாங்கத்தின் பொறுப்பு. இதுதான் நாட்டுக்கு பிரயோசனமானது.
கடந்த காலத்தில் எனது அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிறைவு செய்து விட்டு அவர்களது பெயரை வைத்துக் கொண்டுள்ளனர்.
நான் நாட்டிய நடுகல்லைக் கூட அவர்கள் பிடுங்கி எறிந்துள்ளனர். இதற்காக நாம் கூக்குரல் இடவில்லை.
கடந்த அரசாங்கத்தினால் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை உரிய முறையில் மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவது தான் எந்த அரசாங்கம் வந்தாலும் மேற்கொள்ள வேண்டிய பணி. இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனைவிடுத்து, அரசாங்கம் முன்னெடுக்கும் சகல அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கும் வெளியிலிருந்து உரிமை கோருவது நகைப்புக்கிடமானது.
அரசாங்கம் எது ? அரசியல் எது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதுவே இதற்கான காரணம் எனவும்
நேற்று நிட்டம்புவயில் அத்தனகல்லை பிரதேச சபைக்கான கட்டடமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் சந்திரிக்கா குமாரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலையும் அரசாங்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதனைத் தெரியாதவர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
புதிய அரசாங்கம் கையேற்றதன் பின்னர் முன்னைய அரசாங்கம் ஆரம்பித்து முடிக்காத பணிகளை நிறைவு செய்வது அந்த அரசாங்கத்தின் பொறுப்பு. இதுதான் நாட்டுக்கு பிரயோசனமானது.
கடந்த காலத்தில் எனது அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிறைவு செய்து விட்டு அவர்களது பெயரை வைத்துக் கொண்டுள்ளனர்.
நான் நாட்டிய நடுகல்லைக் கூட அவர்கள் பிடுங்கி எறிந்துள்ளனர். இதற்காக நாம் கூக்குரல் இடவில்லை.
கடந்த அரசாங்கத்தினால் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை உரிய முறையில் மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவது தான் எந்த அரசாங்கம் வந்தாலும் மேற்கொள்ள வேண்டிய பணி. இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனைவிடுத்து, அரசாங்கம் முன்னெடுக்கும் சகல அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கும் வெளியிலிருந்து உரிமை கோருவது நகைப்புக்கிடமானது.
அரசாங்கம் எது ? அரசியல் எது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதுவே இதற்கான காரணம் எனவும்


Comments
Post a Comment