.கனடாவில் சோதனை செய்யப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது.

ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் கொலை வழக்கின் கொலை நடந்த இடத்தில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை பிரிட்டிஷ் கொலம்பியா நிறுவனம் கனடாவில் சோதனை செய்து வழங்கிய சீல் வைக்கப்பட்ட அறிக்கை இன்று (31) இரகசிய பொலிஸாரினால் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் அவர்களுக்கு  கையளிக்கப்பட்டது.

மேலும், கொலை நடந்த காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் எற்படுத்தப்பட்ட உள்ளக மற்றும் வெளியக தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

Comments