கடவுச்சீட்டு காரியாலயம் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது...

கொழும்பு, புஞ்சிபொரளை, ஆனந்த ராஜகருணாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 29ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. 

எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், மேற்படி குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மூடப்பட்டிருக்கும் எனவும், 29ஆம் திகதியன்று, ஒரே நாளில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் சேவை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments