திருகோணமலையில் பதினாரு கிலோ மான் இறைச்சியுடன் சென்றவர் கைது

திருகோணமலை பிரதேசத்தில் கடந்த வருடம் அனுமதிப்பத்திரமின்றி பதினாரு கிலோ மான் இறைச்சியை கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு 25000ம் ரூபாய் தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று புதன்கிழமை(10) உத்தரவிட்டார்.

திருகோணமலை, மொறவெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த வருடம் மொறவெவ பகுதியிலிருந்துதிருகோணமலைக்கு அனுமதிப்பத்திரமின்றி பதினாரு கிலோ மான் இறைச்சியை கொண்டு சென்ற போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் அப்போது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபருக்கெதிராக நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளியாக இணங்கண்டு 25000ம் ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.

Comments