மலேசியாவையும் சிக்கலில் மாட்டும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம் காரணமாக. அங்குள்ள தமிழர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மாத்திரமல்லாது, மலேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும்ஆர்ப்பாட்டங்களை நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக  மலேசிய அரசக்க பாரிய சிக்கல் சிலை உறுவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு பயணம் செய்ய உள்ளார்.

இருந்த போதிலும் ஆசிய பசுப்பிக் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச மாநாடுகளில் இதுவரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என  தெரியவருகிறது.

தெற்காசிய நாடுகள் எதுவும் ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுபப்பினர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை.

ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தில் ஜப்பான், தென் கொரியா, லாவோஸ், மலேசியா, மோங்கோலியா, பிலிப்பைன்ஸ், தாய்வான், தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த அமைப்பில் கண்காணிப்பு மட்டத்தில் இருப்பது ஆசிய நாடுகளில் வியட்நாம் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.

Comments