கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியை...

இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியை ஒருவர்  கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது காரில் வந்த 3 வாலிபர்கள் அவரை கடத்தி சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் போது அந்த ஆசிரியை மங்கியதால் அந்த வாலிபர்கள் பயந்து, அந்த இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

2 மணி நேரத்தின் பின் மயக்கம் தெளிந்த அந்த ஆசிரியை, இது தொடர்பாக காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்கள் அதை கெமராவில் காணொளியாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை காவற்துறையில் முறைப்பாடு செய்தால் அந்த காணொளியை வெளியிடுவோம் என அந்த வாலிபர்கள் மிரட்டியுள்ளதாகவும் அந்த ஆசிரியை தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களை காவற்துறை தேடி வருகின்றது.

Comments