மௌனமாக இருந்தால் ஆபத்து!

தேவையான சந்தர்ப்பங்களில் மௌனமாக இருந்தால், நாடும் நாட்டு மக்களும் இன்னல்களுக்கு உள்ளாக நேரும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக செயற்பட்டமை பிழையில்லை என்றே கருதுகிறேன்.

தமிழ் மக்களுக்கு எதிராகவோ, முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாம் செயற்படவில்லை.

தனிநாட்டைக் கோரி ஆயுதம் ஏந்தியவர்களை தோற்கடிக்கவே யுத்தம் நடத்தப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments