ஞானசாரவுக்கு எப்படி தெரியும் ஐ.எஸ். இலங்கையில் ஊடுருவினார்கள் என்று? சற்று சிந்தியுங்கள்
வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என தெரிவிக்கும் பொதுபல சேனா அமைப்பு, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த வித்தானகே மேலும் குறிப்பிடுகையில்,
சிரியாவில் உயிரிழந்த இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிக்கு இவ் இயக்கம் நஷ்டஈடு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாத முகவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாகவும் இவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் தங்கியிருப்பதாகவும் இவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் டிலான்த குறிப்பிட்டார்.
இந்த ஊடுருவல் விடயத்தை இவர்களுக்கு யார் சொன்னது? இவர்கள் புலனாய்வு கம்பனியா? அரச புலனாய்வு பிரிவா? அல்லது வேறு நாடுகளின் புலனாய்வு ஏஜென்ட்களா? ஒன்றும் இல்லாத பொழுது இவர்கள் வெளியிடும் தகவல்கள் குறித்து அல்லது இவர்களின் கருத்துக்கள் குறித்து பொலிசார் விசாரணை செய்வதில்லையா நல்லாட்சி அரசு ஏன் இவர்களை கண்டு கொள்ள மறுக்கிறது.
குறித்த தகவல்களை அரச புலனாய்வு பிரிவுகளே மறுக்கின்ற சந்தர்ப்பங்களில் இவர்கள் ஊர்ஜிதப்படுத்துவது எவ்வாறு என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ் தீவிரவாதிகளாகவும், அல்லது ஆயுதக் கும்பல்களாகவும் சித்தரிக்க முயற்சிக்கும் இனவெறிக்கும்பல்களுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி இல்லையேல் இது பெரிய விடயமாக உருவெடுத்து எமது சமூகத்தை சீரழிக்கும்.
இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த வித்தானகே மேலும் குறிப்பிடுகையில்,
சிரியாவில் உயிரிழந்த இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிக்கு இவ் இயக்கம் நஷ்டஈடு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாத முகவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாகவும் இவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் தங்கியிருப்பதாகவும் இவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் டிலான்த குறிப்பிட்டார்.
இந்த ஊடுருவல் விடயத்தை இவர்களுக்கு யார் சொன்னது? இவர்கள் புலனாய்வு கம்பனியா? அரச புலனாய்வு பிரிவா? அல்லது வேறு நாடுகளின் புலனாய்வு ஏஜென்ட்களா? ஒன்றும் இல்லாத பொழுது இவர்கள் வெளியிடும் தகவல்கள் குறித்து அல்லது இவர்களின் கருத்துக்கள் குறித்து பொலிசார் விசாரணை செய்வதில்லையா நல்லாட்சி அரசு ஏன் இவர்களை கண்டு கொள்ள மறுக்கிறது.
குறித்த தகவல்களை அரச புலனாய்வு பிரிவுகளே மறுக்கின்ற சந்தர்ப்பங்களில் இவர்கள் ஊர்ஜிதப்படுத்துவது எவ்வாறு என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ் தீவிரவாதிகளாகவும், அல்லது ஆயுதக் கும்பல்களாகவும் சித்தரிக்க முயற்சிக்கும் இனவெறிக்கும்பல்களுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி இல்லையேல் இது பெரிய விடயமாக உருவெடுத்து எமது சமூகத்தை சீரழிக்கும்.


Comments
Post a Comment