ஹெம்மாத்தகமயில் மீட்கப்பட்ட சடலம் கொழும்பில் கடத்தப்பட்ட சாகிப் சுலைமானுடையது !

கொழும்பு - பம்­ப­ல­பிட்டி - கொத்­த­லா­வல அவன்யூவில்  உள்ள தனது வீட்டின் முன்னாள் வைத்து  கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை எரியூட்டப்பட்ட நிலையில் மாவனெல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவருடையது என அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பில் மடவளை நியுஸ் பொலிஸ் ஊடக பிரிவை தொடர்ப்பு கொண்டு கேட்டபோது மீட்கப்பட்ட சடலம் கடத்தப்பட நபருடையது என உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யாத போதும் இது தொடர்பில் தகவல் இருப்பின் இன்று காலை ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

நேற்று கேகாலை பிரதேசத்தில் இருந்து படுகொலை செய்யப்பட்டவரின் தந்தையிடன் 2கோடி  கப்பம் கேட்டு தெலைபேசி அழைப்பு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments