அமைச்சர்கள் பயணித்த உலங்கு வானூர்தி யாருடையது?

நுரெலியா மற்றும் பதுளை போன்ற பிரதேசங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும்போது அமைச்சர் தயாகமகேவினுடைய உலங்கு வானூர்தினையே பயன்படுத்தியதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த ஆட்சியாளர்களை போல பெல் 212 போன்ற உலங்கு வானூர்திகளை பயன்படுத்திவிட்டு, மக்களுக்கான வீடுகளை அமைக்க ஒதுக்கிவைத்துள்ள பணத்தில் அதற்கான கட்டுண்டதை செலுத்துங்கள் என்று செயலாளரிடம் கூறியிருக்க முடியும். ஆனால் அதுவல்ல நல்லாட்சி என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தாம் ஒருபோதும் அரச சொத்துக்களை பயன்படுத்தி மக்கள் பணத்தை சூறையாடுகின்ற செயலில் ஈடுபட மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, அமைச்சர்களான சஜித் பிரேமதாச. நவீன் திஸாநாயக்க போன்றோர் பயணித்த உலங்கு வானூர்தி காலநிலை சீர்கேடு காரணமாக வயல்வெளியில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments