முல்லைத்தீவு குமுளமுனையில் மின்னொழுக்கினால் வீடு ஒன்று எரிந்து நாசம்.!
முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தில் மின்னொழுக்கு காரணமாக வீடு ஒன்று எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு 10 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட திடீர் மின்னொழுக்கு காரணமாகவே வீடு எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில் ஆட்கள் இருந்துள்ள போதிலும் பாதுகாப்பாக வெளியேறியதன் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
சுகுமார் என்ற விவசாயின் வீடே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில் இருந்த பணம் உழவியந்திர பெட்டி, விவசாய உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட சுமார் 15லட்ஷத்துக்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து போயுள்ளது.





Comments
Post a Comment