கிண்ணியா பாலத்தில் மீண்டும் மின் விளக்கு ஒளிர்வதில்லை

திருகோணமலை மாவட்ட கிண்ணியாவின் கடல் மேல் 398 மீற்றர் நீளம் உடைய இப்பாலத்தில் மின் விளக்கு ஒளிர்வதில்லை என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்

அண்மையில் இப் பாலத்தில் உள்ள ஓரிரு மின் குமிழ்கள் மாத்திரமே ஒளிர்ந்தன ஆனால் தற்போது முற்று முழுதாக ஒளிர்வதில்லை.

இதனால் பயணிகள் இரவு நேரங்களில் பெரிதும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்


.Hasfar A Haleem



Comments