இலங்கை முஸ்லிம்களின் ஹலால், ஹராம் காரணங்களால் மது அருந்துவதில்லை... அவர்களுக்கு நன்றி. i

முஸ்லிம் மக்கள் மதுபானம் அருந்துவது குறைவு என்றும், எமது நாட்டில் இவர்கள்மதுபானம் பாவிப்பது குறைந்தளவிலே காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் ஹலால், ஹராம் காரணங்களால் இவர்கள் மது அருந்துவதை தவிர்ப்பதாகவும் இதனால் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டில் உள்ள அனைவரையும் மது பாவனையில் இருந்து மீட்டெடுக்கவும்,மது பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிலிருந்து மது பாவனையை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் ஒன்றுஅவசியம் என்றும், எனவே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க மகா சங்கத்தினரின்தலையீடு அவசியம் என்பதால் அவர்களை அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது

Comments