10 நாட்களில் 200 கூட்டங்கள்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சீர்திருத்தப் பணிகள் அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையுள்ள 10 நாட்கள் முழுவதும் அனுராதபுரத்தை மையப்படுத்தி 200 மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments