Skip to main content

வீதியை விட்டு விலகி பஸ் விபத்து ; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்பாணம் - திருகோணமலை வீதியின் கன்னியா பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்கள்ளாகியதில் 11 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (13) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்பாணத்திலிருந்து திருகோணமலை பயணித்த போதே குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Comments