Posted by
Kantalai News
வீடியோ இணைப்பு) வீட்டில் இருந்து கழுத்தை அறுத்துக்கொண்டு ஓடி, பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த இளைஞன். (19)
மொரட்டுவை – பிலியந்தலை பிரதான பாதையில் கொஸ்பெலென பாலத்தில் இருந்து பொல்கொட நதியில் பாய்ந்த இளைஞரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் தனது வீட்டில் வைத்து தனது கழுத்தை ஏதோ ஒரு ஆயுதத்தால் அறுத்து கொண்டு பின்னர் பொல்கொட நதியில் பாய்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் பிரதேசவாசிகள் மற்றும் காவற்துறை மீட்பு குழுவினரும் இணைந்து அவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் மொரட்டுவை – மோல்பே பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தொலைகாட்சி செய்தி வீடியோ

