சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 47 வயதுடையவர் கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய சிறுமியை 47 வயதுடைய குறித்த நபர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Comments