மட்டக்களப்பில் 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை!

மட்டக்களப்பு திக்கோடை – தும்பாலை பிரதேசத்தில் 49 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை மாமாங்கம் என்பவர் கடந்த திங்கட் கிழமை (19) காலை வைத்தியசாலைக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு புறப்பட்டவர் வியாழக்கிழமை (22) வரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது கணவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில், புதன் கிழமை (21) மாலை முறைப்பாடு செய்துள்ளது.

தனது கணவர் தொடர்பில் யாராவது அறிந்தால் 0776201665 என்ற எமது தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் காணாமல் போனவரின் மனைவி கோரியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments