Skip to main content

பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் : தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம்


பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வி­த­மான கரி­ச­னை­யு­மற்ற வகையில் 64 மாடி­களை கொண்ட தொடர்­மாடி குடி­யி­ருப்பில் எம்மை அடைத்து துன்­பு­றுத்­தவே அர­சாங்கம் விரும்­பு­கின்­றது என்று பம்­ப­ல­ப்பிட்டி தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் தெரி­வித்­தனர்.

இந்தக் குடி­யி­ருப்பு தொகு­தியை வர்த்­தக நட­வ­டிக்­கை­க­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக்­கொண்டு முதி­யோரையும் சிறு­வர்­க­ளையும் அநா­த­ர­வா­கவே பலரும் முயற்­சிக்­கின்­றனர். குறித்த விவ­கா­ரத்தில் உட­ன­டி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யிட்டு பிரச்­சி­னை­களை தீர்க்க முன்­வ­ர­வேண்டும் எனவும் அங்­குள்ள மக்கள் வேண்­டுகோள் விடுத்­தனர்.
குறித்த விடயம் தொடர்பில் பம்­ப­லப் பிட்டி குடி­யி­ருப்பு நலன்­புரி சங்கத் தலைவர் என்.ரகு­நந்தன், பம்­ப­லப்­பிட்­டியில் வசிக்­கின்ற சுமார் 300 குடும்­பங்கள் 10.5 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் பல தொகு­தி­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.
குறித்த மக்­களை தற்­போது புதிய வேலைத்­திட்­டத்­தின்கீழ் ஒரு ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குள் 64 மாடி­களை கொண்ட தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்குள் முடக்க வேலைத்­திட்டம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.
இது மிகவும் மோச­மான நட­வ­டிக்­கை­யாகும். இரு தலை­மு­றை­க­ளுக்கு மேற்­பட்ட காலம் வாழ்ந்த மக்­களை எவ்­வி­த­மான தூர­நோக்­கு­மின்றி ஒரு ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குள் முடக்க நினைப்­பது மிகவும் வேத­னை­யான விட­ய­மாகும்.
மேலும் புதிய வீட­மைப்புத் திட்டம் மூல­மாக எங்­க­ளுக்­கான அடிப்­படை வச­திகள் எவையும் பூர்த்தி செய்­யப்­ப­டாது என்­பது எமக்குத் தெரியும். அவ்­வா­றி­ருக்கும் போது இத்­திட்­டத்தை ஆரம்­ பிப்­ப­தற்கு ஏன் இவ்­வாறு பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­கின்­றார்கள் என்­பது தெரி­யா­ம­லுள்­ளது.
கொழும்பு மாந­கர சபை மற்றும் தேசிய வீட­மைப்பு அதி­கா­ர­சபை போன்­ற­வற்றின் ஊடாக அடிக்­கடி அறி­வித்­தல்­களும் அனுப்­பப்­ப­டு­கின்­றனர். இவை எல்லாம் சட்­டத்­துக்கு முர­ணா­ன­வை­யாகும். குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளோம். பல அமைச்­சர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை மேற்­கொள்ள நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டும் எவையும் பய­ன­ளிக்­க­வில்லை. இந்த நிலம் எங்­க­ளுக்குச் சொந்­த­மா­னது.

எங்­க­ளது உரித்­தின்றி எங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க முடி­யாது. குறித்த புதிய வீட­மைப்புத் திட்டம் மூலம் சுமார் 1098க்கும் மேற்­பட்ட மக்கள் பெரும் பாதிப்­ப­டைவர். முழு மை­யான எங்­க­ளது அடை­யா­ள­மாக உள்ள இந்­நி­லத்தை சூறை­யாட முயற்­சிக்க வேண்டாம்.

சிறு­வர்­களும் முதி­யோருமே அதி­க­மாக இக்­கு­டி­யி­ருப்பில் உள்­ளனர். அவர்களால் புதிய குடியிருப்பில் வாழ்வதென்பது மிகவும் கடினமாகும். இது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இந்த நிலப்பரப்பில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிகின்றோம். அப்படியாயின் அதற்கு ஏன் எங்களது குடியிருப்பை தேர்ந்தெடுத்தார்கள்? இவற்றுக்கெல்லாம் கூடிய விரைவில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்..

Comments