மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்!

30ற்கும் அதிகமான மருந்து வகைகளிக் விலைகள் குறைக்கப்படும் முறைமை இன்று அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று முதல் அந்த மருந்துகளை மக்கள் குறைந்த விலைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் சேனக பிபிலேயின் மருந்து கொள்கை திட்டத்திற்கமையவே இந்த விலை குறைப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments