இரத்தினபுரி பிரதேச மாணவர்களுக்கு நிவாரணம் வேண்டும்!

மத்­திய மாகாண தமிழ்­மொழி  பாட­சா­லை­களில் 2017 ஆம் ஆண்டு உயர்­ கல்­வியை தொடர்­வ­தற்­காக விண்­ணப்­பித்த  இரத்தினபுரி பிரதேச மாண­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், மாண­வர்கள் பெரிதும் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளாகி இருப்­ப­தாக பெற்றோர் கவலை தெரி­விக்­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் தமிழ்­மொழி மூலம் பாட­சா­லை­களில் உயர்­தரப் பிரி­வு­களில் கலை, வர்த்­தகப் பிரி­வுகள் மாத்­தி­ரமே போதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். விஞ்­ஞான, கணித பிரி­வு­களில் உயர்­கல்­வியைத் தொடர விரும்பும் மாண­வர்கள் மத்­திய மாகா­ணத்­திற்கே செல்­கின்­றனர். தற்­போது, இம் மாண­வர்­க­ளுக்கு அங்கும் கத­வ­டைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­பதால், உயர்­கல்­வியை தொடர வழி­யின்றி மாண­வர்கள் அல்­லல்­ப­டு­கின்­றனர்.

இலங்கை ஒரு சுதந்­திர நாடு என்ற வகையில், எமது பிள்­ளைகள் நாட்டின் எப்­பா­கத்­திலும் கல்­வியைக் கற்­றுக்­கொள்­ளவும், பரீட்­சை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கவும் உரி­மை­யுண்டு. அதனை  தமிழ் மாணவர்களுக்கு இல்­லாமற் செய்­வது பொருத்­த­மற்­ற­தொரு விடயம் என்றும் பெற்றோர் சுட்டிக் காட்­டு­கின்­றனர்.

எனவே, இரத்தினபுரி மாவட்ட மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் முகமாக உடனடியாக சகல பிரிவுகளையும் கொண்ட தாக ஒரு பாடசாலையைக் கட்டியெழுப்பு மாறு பிரதேச மக்களும்,  பெற்றோர்களும் வேண்டுகின்றனர்.

Comments