கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன் (39) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments