ஒரு நாள் சேவை இன்று முன்னெடுக்கப்பட மாட்டாது!

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை இன்று (26) முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட் பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள சுஹூருபாய கட்டிட தொகுதிக்கு இந்த திணைக்களம் இட மாற்றம் செய்யப்பட்டமைக்காக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுஹூருபாய கட்டட தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில் இருந்து நாளை தொடக்கம் தேசிய அடையாள அட்டையை பெற்றுகொளவதற்ககான ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments