யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா?

யோஷித வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் 28-ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த கோரிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு காலம் வழங்குமாறு சட்ட மா அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீதிபதி ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த தீர்ப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகர் விளையாட்டின் போது ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறு யோஷிதவின் சட்டத்தரணி கூறியிருந்தார்.

Comments