அம்பாறையில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை ஊடாக பட்டதாரிகளை சேர்த்து கொள்ளும் போது, அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை நகரில் இன்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டகாரர்கள் இருந்த இடத்திற்கு வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர், மஞ்சுல பெர்ணான்டோ, ஆளுனருடன் 21 ஆம் திகதி கலந்துரரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தமையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறைவடைந்துள்ளது.

Comments