வாக்காளர் பதிவு இன்றுடன் நிறைவு!
2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.வாக்காளர்களின் நலன்கருதி இன்றைய தினம் நாடெங்கிலும் உள்ள மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் இதனை தெரிவிக்கின்றார்.
இதனால் தமது பெயர்களை பதிவு செய்யாத வாக்காளர்கள் இன்றைய தினத்திற்குள் பதிவு செய்யுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Comments
Post a Comment