புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வரும்!

அனைத்து கட்சிகளினதும் ஒப்புதலுடன் அரசியல் சாசனம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனமே அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் அனைத்து கட்சிகளிடமிருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Comments