இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை!

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

கொழும்பு வந்துள்ள இந்தியாவின் மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் இந்தியா பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக இலங்கை அமைச்சரவை இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் முடிவு ஒன்றை எடுக்கும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments