அவதானம்... யாசகம் கேட்க வந்த பெண் சிறுவன் முஹம்மது பாதிரை கடத்திச் சென்று விட்டார்.





புத்தளம் பிரதேசத்தில் 4 வயது சிறுவன், இனந்தெரியாத பெண்ணால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (09) முற்பகல் 11.30 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முஹம்மது ஹுசைன் என்பவரின் மகனான முஹம்மது பாதிர் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

யாசகம் கேட்பதற்காக வந்த பெண், சிறுவனை இறுக அணைத்து தூக்கிச் சென்றதாக குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மற்றுமொரு பெண் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, யாசகம் வாங்க வந்ததாக கூறப்படும் பெண்மணியோடு சேர்ந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி,  புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட யுவதியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புத்தளம் பொலிஸார், சந்தேகநபரான மற்றப் பெண்ணை தேடி வருகின்றனர்.

Comments