மஹிந்தவையும் கோத்தாவையும் வறுத்தெடுத்த பொன்சேகா!

இலங்கை இராணுவத்தை பற்றி பேசுவதற்கு மஹிந்தவுக்கும் கோதபாயவிற்கும்  எவ்வித அருகதையும் இல்லை  என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .

கொலை குற்றத்துக்காக 06 இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்பட்டதும் அதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர்கள் இருவரும்தான்  நமக்காக நாம் எனும் திட்டத்தின் கீழ் இராணுவத்தினர் பெயரில் பல கோடிக்கணக்கான பணத்தினை கொள்ளை அடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இராணுவம் தொடர்பில் கருத்து வெளியிடவும் உரிமை கொண்டாடவும்  இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments