நீராடச் சென்ற இராணுவ சிப்பாய் மாயம்!

கல்கிசை கடற்பகுதியில் நீராடச் சென்ற குழுவில் இருந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரைத் தேடும் பணிகளை பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை காணாமல் போனவர் பதுகேகந்த – தென்னேபங்குவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான இராணுவ சிப்பாய் எனத் தெரியவந்துள்ளது.

Comments