இன்று முதல் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மூடப்படும்!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தில் நடாத்திச்செல்லப்படும் பீடங்களை இன்று முதல் நீர் பற்றாக்குறை காரணமாக காலவரையின்றி மூட பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூகவியல் மற்றும் மனிதநேயவியல் செயல்முறை அறிவியல் மற்றும் மேலாண்மை துறை ஆகிய பீடங்கள் இவ்வாறு மூடப்படவுள்ளன.

மற்றைய தேர்வு செயற்பாடுகள் வழமைப்போல இடம்பெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments